Netharland | தேவாலயத்தில் எலும்புக்கூடு - DNA டெஸ்டில் உறுதியானால் 350 ஆண்டு `மர்மம்’ விலகும்
தேவாலயத்தில் எலும்புக்கூடு - DNA டெஸ்டில் உறுதியானால் 350 ஆண்டு `மர்மம்’ விலகும்
தேவாலயத்தில் எலும்புக்கூடு - 350 ஆண்டுகால மர்மம் விலகுமா? நெதர்லாந்தின் மாஸ்ட்ரிக்ட் நகரில் உள்ள தேவாலயத்தில் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது, பிரெஞ்சு இலக்கியத்தில் புகழ்பெற்ற "தி த்ரீ மஸ்கடியர்ஸ்" கதைக்கு உத்வேகமாக இருந்த உண்மையான போர் வீரன் "டி ஆர்டக்னான்" (D Artagnan) என்பவரின் எலும்புக்கூடாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு, 1673-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் உயிரிழந்த 'டி ஆர்டக்னான்' என்பவரின் புதைவிடம் எங்குள்ளது என்பது நீண்டகால மர்மமாகவே இருந்து வந்தது. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடு அவருடையதுதானா என்பதை உறுதிப்படுத்த முனிச் நகரில் டி.என்.ஏ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
