

குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டோல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், கலாச்சாரம், வாழ்வியல், பொருளாதாரத்தில் இந்தியாவுடன் அமெரிக்க இணைந்து செயல்படுவதாக கூறினார். இந்தியா மீது எப்போதும் எங்களுக்கு காதல் உண்டு என்று கூறிய டிரம்ப்,விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ராணுவத்துறையில் இந்தியாவிற்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு கொடுக்கும் எனடிரம்ப் தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப்பின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, டிரம்பின் வருகை, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும் பெருமையளிக்கிறது என்றார். இரு நாடுகளுடைய நட்பு, அசைக்க முடியாதது என்றும், இது வரலாற்று சிறப்புமிக்க உறவு என்றும் கூறினார்.