

அரசு மக்களை பிரித்து பார்க்காமல் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக இலங்கை அமைச்சர் நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை அமைச்சர் நமல் ராஜபக்ச பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் ராஜபக்ச தலைமையிலான அரசு வடக்கு, கிழக்கு, தெற்கு என்று பார்க்காமல், அனைத்து மக்களுக்குமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகிறது என்றும் நமல் ராஜபக்ச கூறினார்.