Maharashtra | திடீரென உரசி கொண்ட 2 விமானங்களால் பரபரப்பு.. உள்ளே அலறிய பயணிகள்

திடீரென உரசி கொண்ட 2 விமானங்களால் பரபரப்பு..

2 விமானங்களின் இறக்கைகள் உரசியதால் விமான நிலையத்தில் பரபரப்பு மகாராஷ்டிர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமானங்களின் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு வந்திறங்கிய இண்டிகோ விமானத்தின் இறக்கை, மும்பையிலிருந்து கோவை செல்ல தயாராக இருந்த, ஏர் இந்தியா விமானத்தின் இறக்கையின் மீது உரசியது. இதனால், ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை சேதமடைந்தது. உடனே இரு விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். மேலும், சேதம் அடைந்த விமானத்தில், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com