இலங்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த நிலங்களை, அதன் உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்கும் நிகழ்ச்சி, வியாழனன்று, மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், 21 புள்ளி 24 ஏக்கர் நிலங்கள் அதன் உரிமையாளர்கள் 14 பேரிடம் திருப்பி அளிக்கப்பட்டது.