

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு சுமார் 175 டன் நிவாரண பொருள்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளது. அந்நாட்டை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் அளித்துள்ள உணவு பொருள்கள், மீட்பு படகுகள், நீச்சல் கவச உடை உள்ளிட்ட பொருள்களை ஏற்றி கொண்டு, 12 சரக்கு விமானங்கள் கேரளா வர உள்ளது.