Palestine | China | ``முடிவு கட்டியே ஆகணும்’’ - பாலஸ்தீனத்திற்காக அதிரடியாக இறங்கியது சீனா
#palestine #china பாலஸ்தீன மக்களின் துயரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என சீனா வலியுறுத்தல் பாலஸ்தீன மக்களின் துயரங்களுக்கு உடனடி முடிவு கட்ட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் சீனா வலியுறுத்தியுள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய சீன தூதர் ஃபூ காங், காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், மனிதாபிமான உதவிகளுக்கான தடைகளை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பாலஸ்தீன விவகாரத்தில் 'இரு நாட்டு தீர்வு' என்பதே சரியான பாதை எனத் தெரிவித்த அவர், பாலஸ்தீனத்தை பாலஸ்தீனியர்களே நிர்வகிக்க வேண்டும் என்ற கொள்கையை சீனா ஆதரிப்பதாகவும் கூறினார். பாலஸ்தீன மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும், அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்தவும் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
