Israel Palestine Fight | இஸ்ரேலியர்கள் நடத்திய திடீர் தாக்குதல் - அதிர்ந்த மேற்கு கரை
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீன கிராம மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நப்லஸின் தெற்கே உள்ள பாலஸ்தீனிய கிராமமான பீட்டா அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. ஆலிவ் அறுவடை காலத்தில் அடிக்கடி இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய அதிகாரிகள் இதுபோன்ற தாக்குதல்களை அரிதாகவே விசாரிப்பதாகவும், தாக்குதல் நடத்தும் குடியேற்றவாசிகள் ஒருபோதும் தண்டிக்கப்படுவதில்லை என்றும் மேற்குக்கரை மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Next Story
