IsrealIranWar| போர் நிறுத்தம் அறிவித்தும் பயங்கர தாக்குதல்..குபுகுபுவென எரியும் ஈரானின் முக்கிய இடம்

போர் நிறுத்தம் அறிவித்தும் பயங்கர தாக்குதல்..குபுகுபுவென எரியும் ஈரானின் முக்கிய இடம்

போர் நிறுத்தம் அறிவித்த பிறகும் பயங்கர தாக்குதல்.. குபுகுபுவென எரியும் ஈரானின் முக்கிய இடம்

போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு ஈரானின் லாவன் தீவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது எதிரிகள் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தத் தாக்குதலால் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, கரும்புகை விண்ணை முட்டியது. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரப் போராடியதாகவும் ஈரான் எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் முன்னிலையில் 2 வார போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com