Israel Gaza War | `ரெட் லைனை’ தாண்டிய மறுநொடி கொடூர சாவு
`ரெட் லைனை’
வடக்கு காசாவில் பாதுகாப்புக் கோட்டை கடந்து வந்தவர் சுட்டுக் கொலை காசாவின் வடக்கு பகுதியில் நடந்த ராணுவ நடவடிக்கையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாதுகாப்புக் கோட்டைக் கடந்து வந்த ஒருவரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள “மஞ்சள் கோடு” எனப்படும் எல்லையை அந்த நபர் கடந்து, இஸ்ரேல் படையினருக்கு நேரடி அச்சுறுத்தலாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் கோடு, இஸ்ரேல் படைகள் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பகுதிகளை குறிக்கிறது. அந்த கோட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், ஹமாஸ் உள்ளிட்ட ஆயுத குழுக்கள் அந்த எல்லையை கடக்க அனுமதியில்லை என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
