Iran Israel Attack | "மீறிவிட்டது.." - "ஒட்டுமொத்த உலகிற்கும் பெரும் ஆபத்து" - வலுக்கும் கண்டனம்

Iran Israel Attack | "மீறிவிட்டது.." - "ஒட்டுமொத்த உலகிற்கும் பெரும் ஆபத்து" - வலுக்கும் கண்டனம்

Iran Israel Attack | "மீறிவிட்டது.." - "ஒட்டுமொத்த உலகிற்கும் பெரும் ஆபத்து" - வலுக்கும் கண்டனம் ஈரான் மற்றும் லெபனான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள், சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என்று, துருக்கி அதிபர் எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற ரமலான் நோன்பு சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், ஈரான் நாட்டு மக்களின் துயரத்தில் துருக்கியும் பங்கெடுத்துக் கொள்வதாக உருக்கமாகத் தெரிவித்தார். ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மோதல் தொடர்ந்தால் ஒட்டுமொத்த உலகிற்கும் பெரும் ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ள எர்டோகன், இப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட துருக்கி தீவிர ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com