மசூதிகள், பள்ளிக்கூடங்களை திறக்க ஈரான் அரசு முடிவு

கொரோனா வைரஸ் தொற்றால் ஈரானில் 96 ஆயிரத்து 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மசூதிகள், பள்ளிக்கூடங்களை திறக்க ஈரான் அரசு முடிவு
Published on
கொரோனா வைரஸ் தொற்றால் ஈரானில் 96 ஆயிரத்து 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 156 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அங்கு கொரோனாவின் தாக்கம் குறைய துவங்கியுள்ள நிலையில், வருகிற 16-ந் தேதியில் இருந்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என, அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி அறிவித்துள்ளார். மேலும், பாதிப்பு குறைவான 132 இடங்களில் மசூதிகள் திங்கட்கிழமையிலிருந்து திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com