புதிய போப் பதவியேற்பு விழாவில் இந்தியா பங்கேற்பு

x

புதிய போப் பதவியேற்பு விழாவில், இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் பங்கேற்கிறார்.கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப்பாக போப் லியோ அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவி ஏற்கும் நிலையில், இந்நிகழ்வில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் இவ்விழாவில் பங்கேற்க மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மற்றும் நாகாலாந்து துணை முதல்வர் யாதுங்கோ பட்டொனை பிரதமர் மோடி நியமித்துள்ளார். போப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்தியக்குழு ரோம் புறப்பட்டு சென்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்