India || 3 நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ள ராஜ்நாத் சிங்
3 நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ள ராஜ்நாத் சிங்
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் போது, சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பு தொடர்பான ஒப்பந்தம் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், அதிநவீன AIP என்ற Air Independent Propulsion தொழில்நுட்பத்துடன் கப்பல்கள் தயாரிக்கப்பட உள்ளன. ஜெர்மனி நிறுவனத்துடன் இணைந்து, மும்பையில் உள்ள மசகான் டாக் கப்பல் கட்டும் நிறுவனம் இந்த கப்பல்களை தயாரிக்க உள்ளது. இந்த ஒப்பந்தம், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
