மெக்காவில் கனமழை - பெரும் வெள்ளப்பெருக்கு
சவுதி அரேபியாவின் மெக்காவில் பெய்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள் ஆறுகளாக மாறி, வாகனங்கள் நீரில் அடித்து சென்றன.
மெக்கா, ஜெட்டா, மதீனா உள்ளிட்ட கடலோர பகுதிகள் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. மணிக்கு 50 கி.மீ வரை காற்று வீசியதாகவும், கடல் அலைகள் 2 புள்ளி 5 மீட்டர் உயரத்தை எட்டியதாக கூறப்படுகிறது.
Next Story
