கோத்தபய ராஜபக்ச இன்று இந்தியா வருகை

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச 3 நாள் பயணமாக இன்று இந்தியா வர உள்ளார்.
கோத்தபய ராஜபக்ச இன்று இந்தியா வருகை
Published on

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கலாச்சார, உறவுகள் மேலும் வலுப்பெற, இந்தியாவிற்கு வருமாறு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட, கோத்தபய ராஜபக்ச 3 நாள் பயணமாக இன்று மதியம் இந்தியா வர உள்ளார். டெல்லியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்ச பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com