வங்கதேச முன்னாள் பிரதமர் மறைவு - இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சித் தலைவருமான பேகம் கலீதா ஜியாவின் மறைவு செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்ததாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்... வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக, வங்கதேசத்தின் வளர்ச்சிக்கும், இந்தியா-வங்கதேச உறவுகளுக்கும் அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும் என்றும், 2015ஆம் ஆண்டு டாக்காவில் அவருடனான தனது அன்பான சந்திப்பை நினைவுகூர்வதாகவும் தெரிவித்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com