தப்பித்த போதை கும்பலின் ராஜா.. நாடு முழுவதும் வெடித்த வன்முறை.. ஈக்வடாரில் பதற்றம்

x

ஈக்வடார் நாட்டில் கைதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 11 சிறை ஊழியர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 8ம் தேதி சிறையில் இருந்து மிகப்பெரிய போதைப்பொருள் கும்பல் தலைவன் தப்பியதில் இருந்து ஈக்வடாரில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. அந்நாட்டில் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆயுதமேந்திய கும்பல்கள் வன்முறையில் ஈடுபடத் துவங்கிய நிலையில் ஏழு சிறைச்சாலைகளில் 158 காவலர்கள் மற்றும் 20 நிர்வாக ஊழியர்கள் பிணைக்கைதிகளாக சிறைக்கைதிகளால் பிடித்து வைக்கப்பட்டனர். அவர்களில் 11 சிறை ஊழியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்