Elnino | India| உக்கிரமடையும் `எல்நினோ’ - டேஞ்சர் Zone-ல் இந்தியா.. நம் முதுகெலும்புக்கே பேராபத்து
தீவிரமடைந்து வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றத்தால், வரும் 2027ம் ஆண்டிற்குள் உலகளவில் கூடுதலாக 4.9 கோடி மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. உலகளவில் தீவிரமடைந்து வரும் எல் நினோ பருவநிலை மாற்றத்தின் காரணமாக வறட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் கடுமையான வெப்ப அலை உருவாகும் வாய்ப்புள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. இதனால், பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய 45 நாடுகளில் பட்டினியால் தவிப்பவர்களின் எண்ணிக்கை 22.5 கோடியிலிருந்து 27.4 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த எல் நினோ நிகழ்வு 2026 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை உச்சத்தை தொடும் என்றும், இதன் தாக்கம் 2027 வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய ஐ.நா. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
