

மெக்சிகோவில் கடந்த 21 ஆம் தேதி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 5 ஆயிரத்து 343 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் ஆயிரத்து 44 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தனர். இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்வாகும். இந்த ஒரு நாளில், மட்டும் பிரேசிலை பின்னுக்கு தள்ளி, மெக்சிகோ முந்தியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், பிரேசில் 2 வது இடத்தில் உள்ளது. அங்கு, 51 ஆயிரத்து 407 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.