

இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அமளி மற்றும் மோதலுககு பின்னால் அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் சதி முயற்சி உள்ளதாக ஐக்கிய இடதுசாரி முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு மஹிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவுமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில் தெரிவுக் குழுவை அமைப்பதற்கான யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் தெரிவுக் குழுவுக்கான பெயரிடல் பணிகளை ஆரம்பிக்கப் போவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அணி அறிவித்துள்ளதால் இலங்கை அரசியலில் பரபரப்பான நிலை உருவாகி உள்ளது.