சீனாவின் தென் பகுதிகளில் கனமழை - நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கிய மக்கள் வெளியேற்றம்

சீனாவின் தென்மேற்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
சீனாவின் தென் பகுதிகளில் கனமழை - நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கிய மக்கள் வெளியேற்றம்
Published on

சீனாவின் தென்மேற்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சுற்றுலா தளமான வென்சுயான் கவுண்டியில் நிலச்சரிவுக்கு இடையே சிக்கி தவித்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து பெய்து வரும் கனமழையால் சீனாவின் தென் பகுதியில் உள்ள பெரும்பாலான ஆறுகள் நிரம்பியுள்ளது, வெள்ள அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com