கம்போடியாவில் களைகட்டிய எருமைப் பந்தயம்
கம்போடியாவில், பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்றான எருமைப் பந்தயம் கோலாகலமாக நடைபெற்றது. கண்டல் KANDAL மாகாணத்தில், மூதாதையர்களின் நினைவாக நடைபெறும் வருடாந்திர விழாவின் ஒரு பகுதியாக எருமைப் பந்தயம் நடைபெற்றது. இதில், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தங்கள் எருமைகளை பங்கேற்கச் செய்தனர். இதற்காக எருமைகள் அலங்கரிக்கப்பட்டு, அதன்மீது போட்டியாளர்கள் அமர்ந்து சென்றனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, மூதாதையர்களின் நினைவாக படையலிட்டு மக்கள் வழிபட்டனர்.