இந்திய கிரிக்கெட் அணியினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரிட்டன் மன்னர்

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியினருடன், பிரிட்டன் மன்னர் சார்லஸ் கலந்துரையாடினார். லண்டன் நகரில் உள்ள செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனைக்கு சென்ற இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியினரை, மன்னர் சார்லஸ் சந்தித்தார். பின்னர், வீர‌ர்கள், பயிற்சியாளர்கள், பணியாளர்கள், பிசிசிஐ அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்த இந்த நிகழ்வில் இந்திய அணியினர் மன்னரின் வரவேற்பால் உற்சாகம் அடைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com