

அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், டெல்டா வகை கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அர்னால்டு , மக்களை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முகக்கவசம் அணியுமாறும் வலியுறுத்தியதோடு, அப்போதுதான் சுதந்திரமாக வெளியில் வர முடியும் என்றும் செய்தி வெளியிட்டுள்ளார்.