

இலங்கையில் தாக்குதல் நடக்கலாம், என இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றக்குழு முன்னிலையில் ஆஜராகி சாட்சியமளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இது சர்வதேச தீவிரவாதம் என்றும் தற்போது ராணுவம் முகம் தெரியாத எதிரியுடன் யுத்தம் செய்வதாகவும் கூறினார். முப்படை மற்றும் புலனாய்வு பிரிவின் உதவியுடன் தீவிரவாத வளர்ச்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.