டிரம்ப் பரபரப்புக்கு மத்தியில் சீனாவுக்கு ஊமைக்குத்தாக குத்திய இந்தியா
சீனாவிடம் கவலை தெரிவித்த இந்தியா
சீன வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்திய பயணத்தின் போது, இந்திய - சீன எல்லையில்
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டி வரும் மிகப்பெரிய அணை குறித்து இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனா கட்டும் இந்த அணையால் கரையோர இந்திய மாநிலங்களான அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் பெரும் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால் இந்த விவகாரத்தில் மிகுந்த வெளிப்படை தன்மையின் தேவை குறித்து இந்திய தரப்பில் வலுவாக அடிக்கோடிட்டு காட்டப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story
