"சம்பளம் கேட்டதுக்கு எல்லாத்தையும் புடிங்கிட்டு வெளிய அனுப்பிட்டாங்க" - அபுதாபியில் கதறும் தமிழர்கள்

x

அபுதாபியில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தில் வேலைக்காக, மேலூர் அருகே உள்ள எட்டிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் செந்தில்குமார், புதுக்கோட்டையை சேர்ந்த ராஜீவ்காந்தி மற்றும் செல்வகுமார் ஆகியோர் சென்றுள்ளனர். இவர்களுக்கு, பணியில் சேர்ந்த முதல் ஐந்து மாதங்கள் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு அவர்களது பாஸ்போர்ட் மற்றும் செல்போன்களை பறித்து கொண்டு நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர். தற்போது உண்ண உணவும், இருக்க இடமும் இல்லாமல் நாங்கள் கஷ்டப்படுகிறோம் என, அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும், தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்