காட்டெருமையை சீண்டிப் பார்த்த சுற்றுலா பயணி - ரீல்ஸ் சர்ச்சை

x

கொடைக்கானலில், தடை செய்யப்பட்ட வட்ட கானல் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த ஒரு சுற்றுலா பயணி, அங்கிருந்த காட்டெருமையை துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட நிலையில், இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சூழலில், வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் துன்புறுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்