இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (30-08-2025)
- அரசு முறை பயணமாக ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சீனா சென்றடைந்தார் பிரதமர் மோடி...
- நல்லக்கண்ணுவை போன்றோர் இருக்கும் போது நடிகர்கள் நாடாளத் துடிக்கிறார்கள்...
- ஆன்லைன் முதலீடு தொடர்பான URL Link-களில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...
- தமிழகத்தில் செப்டம்பர் 5 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது...
- வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன், கீழே கிடந்த குளிர்பான பாட்டிலை எடுத்து குடித்ததால் உயிரிழந்தார்...
- கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் கிராமத்தில், கூரை வீடு தீப்பற்றி எரிந்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது...
- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், செப்டம்பர் 1 முதல் வழக்கம்போல் செயல்படும்...
- கடலூரில் ஓரின சேர்க்கையின் போது எடுத்த படங்களை பரப்பிவிடுவேன் என தோழி மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்...
- ராஜஸ்தான் அரசிடம் ஓய்வூதியத்திற்காக குடியரசு முன்னாள் துணை தலைவர் ஜெகதீப் தங்கர் விண்ணப்பித்தார்...
- டிரம்ப் இறந்துவிட்டார் என்ற வாசகம் X தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது...
- 2030ல் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்து, இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது...
Next Story
