Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (31.12.2025) | 7 PM Headlines

x
  • ஆஸ்திரேலியாவில் ஆங்கிலப் புத்தாண்டு கோலாகலம்
  • ஆஸ்திரேலியாவில் 2026 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததையொட்டி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது...
  • சிட்னி துறைமுகத்தில் இரவை பகலாக்கும் விதமாக நடைபெற்ற கண்கவர் வாஅணவேடிக்கை மற்றும் லேசர் விளக்குகளில் ஒளி அங்காரத்தைக் கண்டு மக்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்..
  • ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டட்டம் களைகட்டியுள்ளது...
  • சமீபத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு, பொதுமக்கள் தங்களின் செல்போன் டார்ச்சை ஒளிரவிட்டும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்...
  • திராவிட மாடல் 2 Point O ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம் என்று நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்...ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே பொங்கல் கொண்டாட்டங்களையும் முன்னெடுக்க திமுக-வினருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்..
  • நியூஸிலாந்தில் 2026 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது
  • நியூஸிலாந்தில் தலைநகர் ஆக்லாந்தில் உள்ள ஸ்கை டவர் மின்னொளியில் ஜொலிக்க, 2026 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது...கண்கவர் வாண வேடிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...
  • இன்னும் சில நிமிடங்களில் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க தயாராகியுள்ள, ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன...உலகப் புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது....
  • உலகிலேயே முதல் நாடாக கிரிபாட்டி என்ற குட்டித் தீவில் 2026 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது...பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டித் தீவில் பழங்குடியின மக்கள், சுற்றுலாப் பயணிகள் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி மகிழ்நனர்..
  • 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தை நேரில் கண்டுகளிக்க நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிந்துள்ளனர்...ஒடிசா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சூரிய அஸ்தமனத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்....
  • புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நள்ளிரவில் கடலில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது...கடற்கரை முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்...
  • புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது...இரவு 9 மணிக்கு மேல் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கண்காணிப்பு டவர் அமைக்கப்பட்டுள்ளது....
  • புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, சென்னை மெரினா
  • ஆங்கில புத்தாண்டையொட்டி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்...திராவிட மாடல் 2.0 அமைவதற்கான தொடக்கமாக இந்த புத்தாண்டைக் கொண்டாடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...
  • ஆண்டின் கடைசி நாளில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 960 ரூபாய் குறைந்துள்ளது....சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழாக சரிந்து 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...

Next Story

மேலும் செய்திகள்