கண்முன்னே நீரில் மூழ்கிய மகள்... காப்பாற்ற சென்ற தாயும் பலி... கதறிய தந்தை- கலங்கச்செய்யும் காட்சி

x

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கண்மாயில் குளிக்க சென்ற தாயும் மகளும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

Vovt

அழகமடை பகுதியைச் சேர்ந்த ராஜாராம், ராஜேஸ்வரி தம்பதிக்கு 12 வயதில் ஹஞ்சனி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்... இவர்கள் பெங்களூரில் வசித்து வந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்துள்ளனர்... இன்று காலை ராஜேஸ்வரி மற்றும் ஹஞ்சனி ஆகிய இருவரும் வீட்டின் அருகில் உள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது கண்மாயில் தாயுடன் குளித்துக் கொண்டிருந்த மகள் ஹஞ்சனி திடீரென நீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளார். மகளைக் காப்பாற்ற ராஜேஸ்வரி சென்ற போது ஆழமான பகுதியில் தாயும் மகளும் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்... போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்