வயலில் வைக்கப்பட்ட தீ பரவியதால் 14 ஆட்டுக்குட்டிகள் உயிரிழப்பு
வயலில் வைக்கப்பட்ட தீ பரவியதால் 14 ஆட்டுக்குட்டிகள் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே புலிக்குளம் கிராமத்தில் வயலில் வைக்கப்பட்ட தீ பரவியதால், 14 ஆட்டுக்குட்டிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேய்ச்சலுக்கு சென்றிருந்த உரிமையாளர், ஆட்டுக்குட்டிகளை வயலில் உள்ள குடிலில் அடைத்து விட்டு சென்ற நிலையில், அருகிலிருந்த அறுவடை வயலில் பரவிய தீ குடிலையும் எரித்ததாக கூறப்பட்டுள்ளது
