பைக்கில் இருந்த பெட்ரோலை திருடிவிட்டு சிசிடிவி முன் முகத்தை மூடி போஸ் கொடுத்த இளைஞர்
கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட பைக்குகளில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேட்டுப்பாளையம் பாக்குக் காரத் தெருவில் பைக்குகளில் பெட்ரோலை சாவகாசமாக திருடிய ஒரு இளைஞர், அங்கிருந்த சிசிடிவி கேமராவின் முன்பு பெட்ரோல் திருடிய பாட்டிலை காண்பித்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை கைது செய்யவும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
