இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டார்.
இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை
Published on
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டார். காளையார்கோவில் அருகே சென்று கொண்டிருந்த வினோத்குமார் என்ற இளைஞரை, ம‌ர்ம நபர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் தலை உள்பட பல பாகங்களில் காயம் ஏற்பட்டு, நிலைகுலைந்து விழுந்த வினோத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com