தண்டவாளத்தில் மீட்கப்பட்ட இளைஞர் உடல்...

ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரின் உடல் தலை துண்டான நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தண்டவாளத்தில் மீட்கப்பட்ட இளைஞர் உடல்...
Published on
சேலம் மாவட்டம் கொங்குப்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரின் உடல் தலை துண்டான நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர், கொங்குப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் விக்னேஷ்குமார் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா, தற்கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com