Private Bus Issue| ``எங்களையே அடிப்பீங்களா.. ஒரு பிரைவேட் பஸ் கூட ஓடாது’’ - டிரைவர்கள் எச்சரிக்கை

``எங்களையே அடிப்பீங்களா.. ஒரு பிரைவேட் பஸ் கூட ஓடாது’’ - டிரைவர்கள் எச்சரிக்கை

``எங்களையே அடிப்பீங்களா.. ஒரு பிரைவேட் பஸ் கூட ஓடாது’’ - அரசுக்கு பிரைவேட் பஸ் டிரைவர்கள் எச்சரிக்கை #privatebus #salemprivatebusissue SI தாக்கியதாக தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மறியல் - பரபரப்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே நேர பிரச்சனை காரணமாக மோதல் ஏற்பட்ட நிலையில், போலீசார் தங்களை தாக்கியதாக கூறி தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மறியலில் ஈடுபட்டனர். தங்களை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் சிவசக்தி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பேருந்துகள் இயங்காது எனக் கூறி, தனியார் பேருந்து ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com