டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் - உளவுத்துறையினர் மிரட்டியதாக புகார்

சங்கரன் கோவில் அருகே குருக்கள் பட்டியில் செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் - உளவுத்துறையினர் மிரட்டியதாக புகார்
Published on

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை சேர்ந்தவர் மகாராஜன். இவர் சமூக வலைதளங்கள் மூலமாக முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த‌தாக, சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். இதன் பின்னர் சிறையில் இருந்து வெளிவந்த அவர், தன்னை உளவுத்துறையினர் கண்காணிப்பதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் கூறி, செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, போலீசார், அவரை,மன நல மருத்துவமனையில் சேர்த்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com