திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

x

செங்கல்பட்டு அருகே திருமணமாகாத விரக்தியில் பிறந்தநாள் அன்று இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்கப்பெருமாள் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மூத்தமகன் மற்றும் மகளுக்கு திருமணம் ஆன நிலையில், இளையமகள் தீபிகாவுக்கு கடந்த 7 வருடங்களாக மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். தீபகாவின் 28 வயது பிறந்தநாளை கொண்டாட பெற்றோர்கள் அவரை கோவிலுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் குளிக்க சென்ற தீபிகா நீண்ட நேரம் ஆகியும் வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றனர் . அப்போது, குளியலறையில் உள்ள ஷவரில் தீபிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது


Next Story

மேலும் செய்திகள்