சென்னை போரூர் பகுதியை சேர்ந்த இளைஞர் காணாமல் போன தனது அண்ணனை கண்டுபிடித்து தரகோரி பிரபல உணவக விளம்பர பலகையின் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுமார் 30 அடி உயர டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற அந்த இளைஞரிடம் ஓலிப்பெருக்கி மூலம் பேசினர். சுமார் 1 மணி சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.