Taiwan Girl Issue| ``வெளிநாட்டு பொண்ண கூட விட்டு வைக்கலயா’’ - உடுமலை இளைஞரை ஜெயிலில் போட்ட போலீஸ்

``வெளிநாட்டு பொண்ண கூட விட்டு வைக்கலயா’’ - உடுமலை இளைஞரை ஜெயிலில் போட்ட போலீஸ்

``அடப்பாவிகளா வெளிநாட்டு பொண்ண கூட விட்டு வைக்கலயா’’ - உடுமலை இளைஞரை தூக்கி ஜெயிலில் போட்ட போலீஸ் தைவான் பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய உடுமலை இளைஞர் கைது தைவான் நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக உடுமலையைச் சேர்ந்த இளைஞர் ஜெகதீஷை போலீசார் கைது செய்தனர். கடந்த 2023-ம் ஆண்டு முனைவர் பட்டப் படிப்புக்காக தைவான் சென்ற ஜெகதீஷுக்கு, டேட்டிங் செயலி மூலம் ஜோயிங்யிங் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியதாக கூறப்படுகிறது. படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால், அவரது படிப்பு மற்றும் தங்குமிட செலவுகளுக்கு அந்த பெண் உதவியதாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், இந்தியா திரும்பிய ஜெகதீஷ், தொடர்பை துண்டித்ததாகஅப்பெண் அளித்த புகாரில், உடுமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com