தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் பெண்கள் முதியவர்கள் என பலர் கலந்துகொண்டு இடைவிடாத யோகாசனங்கள் செய்து அசத்தினர். மேலும் கலந்துகொண்ட அனைவருக்கும் இயற்கை உணவுகள் மற்றும் இயற்கை பானங்கள் வழங்கப்பட்டது.