Chennai Crime | பீடி கொடுக்க மறுத்த வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த கதி | சென்னையில் அதிர்ச்சி
பீடி கொடுக்க மறுத்த வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த கதி | சென்னையில் அதிர்ச்சி
Chennai Crime | பீடி கொடுக்க மறுத்த வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த கதி | சென்னையில் அதிர்ச்சி
பீடி கொடுக்க மறுத்த வடமாநில கட்டட தொழிலாளி அடித்துக் கொலை சென்னை நொளம்பூர் அருகே பீடி கொடுக்க மறுத்ததால், மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஜலட்சுமி நகர் பகுதியில் தங்கி பணியாற்றி வந்த அபிஜித், மது போதையில் இருந்த 4 இளைஞர்களிடம் பீடி கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் உருட்டுக்கட்டை மற்றும் கம்பியால் அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. மருத்துவமனையில் அபிஜித் உயிரிழந்ததை அடுத்து, தலைமறைவான 4 இளைஞர்களை நொளம்பூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
