Gummidipundi |வேலை செய்யும்போதே துடிதுடித்து பலியான தொழிலாளி - உடனே போராட்டத்தில் குதித்த விசிகவினர்
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில், 30 அடி உயரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த கூலித்தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த எளாவூர் பகுதியை சேர்ந்த சூர்யாவின் குடும்பத்திற்கு தனியார் நிறுவனம் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என உறவினர்களும், விசிகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
