பெண்கள் பாதுகாப்பு.. கோவையில் அதிரடியாக அமலான திட்டம் தொடங்கிவைத்த அமைச்சர் | Kovai |Women's Safety

x

கோவையில் பேருந்து நிறுத்தங்களில் ஸ்மார்ட் கேமரா மற்றும் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

உலக மகளிர் தினத்தையொட்டி கோவை மாநகர காவல்துறை சார்பில் கோவை அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்மார்ட் கேமரா மற்றும் ஸ்பீக்கர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் .மேலும் 200 பேருந்து நிறுத்தங்களில் இந்த ஸ்மார்ட் கேமரா மற்றும் ஸ்பீக்கர் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்