சென்னையை அதிரவைத்த பெண் மரணம் - ஆக்டிவிஸ்ட் சொன்ன பகீர் தகவல்
பள்ளத்தில் விழுந்து பெண் பலி - மாநகராட்சி விளக்கம்
சென்னை அரும்பாக்கத்தில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தார். மழைநீர் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாமல் இருந்ததே விபத்திற்கு காரணம் எனக் குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடப்போவதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம், பெண்ணின் மரணத்திற்கு மழைநீர் வடிகால் பள்ளம் காரணம் அல்ல எனக் கூறியுள்ளது. இறந்த பெண் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருப்பதாகவும், அதுவும் வண்டல் மண் சேரும் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இறந்தவில்லை எனவும் சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
