தலைமறைவான பெண் மாவோயிஸ்ட் நீதிமன்றத்தில் சரண்...

தலைமறைவான பெண் மாவோயிஸ்ட் பத்மா பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
தலைமறைவான பெண் மாவோயிஸ்ட் நீதிமன்றத்தில் சரண்...
Published on

இரண்டாயிரத்து 2ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்த மவோயிஸ்ட் பத்மா, நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில், பூந்தமல்லி நீதிமன்றத்தில் பத்மா சரண் அடைந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டி வரும் 19ஆம் தேதி வரை பத்மாவை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் பத்மாவை புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com