Nellai Murder | நெல்லையில் பெண் துடிதுடிக்க கொலை.. பிரேத பரிசோதனையில் அம்பலமான திடுக்கிடும் பின்னணி

நெல்லையில் நகைக்காக பெண் அடித்துக் கொலை நெல்லையில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், 9 பவுன் நகைக்காக அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. முக்கூடலைச் சேர்ந்த மரிய ஜெயா என்ற பெண், நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முதலில் மர்ம மரணம் எனப்பதிவான இந்த வழக்கில், பிரேதப் பரிசோதனையில் அவர் தலையில் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து நடத்திய தீவிர விசாரணையில், அவரிடம் இருந்த 9 பவுன் தங்க நகைகளை பறிப்பதற்காக, தச்சநல்லூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞர் மரிய ஜெயாவை கட்டையால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து தலைமறைவாக இருந்த சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com