ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் - பரபரப்பு
நாகர்கோவிலில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுக்க வந்த பெண், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
நாகர்கோவிலில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுக்க வந்த பெண், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் முகாமில் பங்கேற்ற பேச்சிபாறையை சேர்ந்த ஷீலா என்ற பெண், திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தடுத்து அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கன்வாடி மைய பணிநீக்கம் தொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லாத விரக்தியில் இந்த முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
