``உங்களை ஏன் கைது செய்யவில்லை..’’ ஜெகன்மூர்த்தியிடம் சொன்ன நீதிபதி

x

காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் முன் ஜாமீன் கோரிய புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி மற்றும் வழக்கில் தொடர்புடைய ஏடிஜிபி-யை பிற்பகல் நேரில் ஆஜராகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.

பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கு தொடபாக பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என கூறி, முன் ஜாமீன் கோரி, ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்